top of page

கடவுளின் முத்தமே, சாத்தானின் சகவாசமே...

Updated: Sep 14, 2025

கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை
கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை

ஒரு கலைஞனிடம் கேட்ட வேண்டியது:

“கலை உனக்கு என்னவெல்லாம் கொடுத்தது” என்பதல்ல.  

“கலை உன்னிடமிருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொண்டது” என்பதைத்தான். 


கலை, சகலத்தையும் விழுங்கி விடுகின்ற கருந்துளை;

கலை, கண்ணீரின் வாடைக் கண்டு வந்து கழுத்தை கவ்வுகின்ற மிருகம்;

கலை, கட்டுப்பாடுகளை தாண்டிய  விதிமீறல்; தான் நினைத்த திசையெல்லாம் திங்களை தோன்றி மறைய செய்யும் சூனியக்காரன்;

கலை, கண்ணீர் விரும்பி உடுத்திக் கொள்கின்ற ஆடை;

கலை, மாமூல் கேட்டு வந்து மிரட்டுகின்ற ரௌடி;

கலை, வாழ்வின் அத்தனை சுவாரஸ்யங்களையும் எடுத்து வெளியில் வீசி விட்டு தகராறு செய்கின்ற அடியாள்;

கலை, கடவுளின் முத்தம்; கலை, சாத்தானின் சகவாசம்;

கலை, கருணையற்று நிகழ்த்தப்படுகின்ற கருணைக் கொலை;

கலைக்கும் கலைஞனுக்குமான உறவு ஒரு தவிர்க்க முடியாத துயரம்.


கலை, வாழ்வை கிழித்து தைக்கின்ற தையல்காரன்;

கலைஞன், இரவை இடித்து சமைக்கின்ற சமையல்காரன்; 

கலை, பக்கத்து வீட்டு சண்டையின் சுவாரஸ்யம்; 

கலைஞன், சண்டையை தடுக்க போய் தலை உடைந்த பரிதாபம்;

கலை, குழப்பி விடுகின்ற தெளிவு;

கலைஞன், தெளிவாய் குழம்பி முழிக்கின்ற அசடு;

கலைஞன் காதல் செய்வான்; கலை அதை பிடுங்கிக் கொள்ளும்;

கலைஞன் ஆசைப்படுவான்; கலை அத்தனையையும் பறித்துக் கொள்ளும்;

கலைஞன் தற்கொலை செய்ய துடிப்பான்; 

கலை, அதையும் தடுத்து வேடிக்கை பார்க்கும்;

கடைசியில் ஒரு வழியாகி கலைஞன் செத்தொழிவான்;

கலை, அவனை மௌனமாக நினைத்துக் கொள்ளும்.


ஒரு கலைஞனிடம் கேட்ட வேண்டியது, 

“கலை உனக்கு என்னவெல்லாம் கொடுத்தது” என்பதல்ல. 

“கலை உன்னிடமிருந்து என்னவெல்லாம் எடுத்துக் கொண்டது” என்பதைத்தான். 









1/365

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

©2020 by Jerome. Proudly created with Wix.com

bottom of page